மண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை , பொதுவாக, மண் புழு உரம் செய்ய, மண்ணில் பள்ளம் தோண்டி செய்வார்கள். அதற்கு பதிலாக, வேறு வழி பயன்படுத்தி துணி உணர்த்தும் கொடியில் சிறு சிறு polyethene பைகளை தொங்க விட்டு. அவற்றில், மண்ணையும், இல்லை தழைகளையும் நிரப்பி, 100 முதல் 200 மண் புழுக்களை விட்டு. மாட்டு சாணத்தையும் நன்றாக சேர்த்து ஐந்து நாட்கள் பின்பு சிறிது நீர் தெளித்து. 45 நாட்கள் பின்பு மண்புழு உரம் உபயோகத்திற்கு ரெடி.
இந்த பிளாஸ்டிக் பைகள், நிலத்திலிருந்து ஐந்து அடி உயரத்தில் தொங்குகின்றன. துணி கயறு கட்டியிருக்கும் இரண்டு முனையிலும், சிறிது கிரீஸ் மற்றும் சிறிது பூச்சி மருந்து தடவுகிறார்.
இந்த முறையினால், பல நன்மைகள் உள்ளன:
- மண்புழுக்கள் கயிறில் இருந்து தொங்குவதால், எலி போன்றவற்றால் தொந்தரவு வருவதில்லை.
- கயிற்றின் இரண்டு முனையிலும், பூச்சி மருந்து தடவுவதால், எறும்பு, கரையான் போன்றவை மண் புழுகளிடம் போக முடியாது.
- பிளாஸ்டிக் பைகளில், ஓட்டைகள் இருப்பதால், காற்று உள்ளே போகிறது. மண்புழு உரத்தையும், எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.